லிமரைகூ

காற்று

எத்தனைநாள் சுற்றுதுவோ காற்று
ஏறுதுவே இன்றுநாளை நேற்று
---யாரனுப்பி வைத்தாரோ
---யாரிதனைத் தைத்தாரோ
ஏதிதற்கு ஆகிடுமோ மாற்று !

நிலா

முத்துமுத்தாய் பூத்திருக்கு வானம்
முழுமைநிலா மறைவதிலேன் நாணம்
---பாதியிலே தேய்கிறது
---பாதிதலை சாய்கிறது
மூழ்விட்டேன் இதனழகில் நானும் !

கடல்

அலையோசை காதுகளில் இசையே
அலைவதெலாம் காற்றடிக்கும் விசையே
---யாரிதனை சிந்திட்டார்
---யாழிசைக்க முந்திட்டார்
அலைகடலே இங்கெட்டுத் திசையே !

வித்தக இளங்கவி
விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (13-Jul-15, 5:42 pm)
பார்வை : 96

மேலே