பிள்ளைப்பேறு எது சுகம்

பிள்ளைப்பேறு; எது சுகம்! – வஞ்சித் துறை

பிள்ளைப் பேறு;
இயற்கை வழியா,
சிசேரிய னா,எது
சுகமெனச் சொல்நீ! 1

ஒன்று பெறுவது,
ஒன்று,பெறப் படுவது;
ஒன்று,தான் பெறுவது,
ஒன்றுமருத்து வர்,பெற்றார்; 2

பிள்ளைப்பேறு; எது சுகம்! – வஞ்சி விருத்தம்

ஒருதாயார் சொல்லக் கேட்டேன்,
இதுஎன் பிள்ளைநான் பெற்றேன்,
என்துடை நடுங்கி .வலியைத்
தாங்கி நானே பெற்றேன்; 1

ஒன்றுவலி யைத்தாங்கிப் பெறுவது,
ஒன்றுவலி யின்றிப் பெறுவது;
சிசேரியன் வழிபிறப் பதைவிட,தான்
பிரசவிக் கிறதே பெரியசுகம்! 2

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (19-Jul-15, 1:27 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 58

மேலே