பிள்ளைப்பேறு எது சுகம்
பிள்ளைப்பேறு; எது சுகம்! – வஞ்சித் துறை
பிள்ளைப் பேறு;
இயற்கை வழியா,
சிசேரிய னா,எது
சுகமெனச் சொல்நீ! 1
ஒன்று பெறுவது,
ஒன்று,பெறப் படுவது;
ஒன்று,தான் பெறுவது,
ஒன்றுமருத்து வர்,பெற்றார்; 2
பிள்ளைப்பேறு; எது சுகம்! – வஞ்சி விருத்தம்
ஒருதாயார் சொல்லக் கேட்டேன்,
இதுஎன் பிள்ளைநான் பெற்றேன்,
என்துடை நடுங்கி .வலியைத்
தாங்கி நானே பெற்றேன்; 1
ஒன்றுவலி யைத்தாங்கிப் பெறுவது,
ஒன்றுவலி யின்றிப் பெறுவது;
சிசேரியன் வழிபிறப் பதைவிட,தான்
பிரசவிக் கிறதே பெரியசுகம்! 2