எனக்கெதற்கு இன்னொருத்தி
நான் துன்பத்தில் சாய விரும்பும்
தோள்கள் உன்னிடமே இருக்கின்றன.
நான் களைத்துப் போய் உறங்க விரும்பும்
மடியும் உன்னிடமே இருக்கின்றன.
என் கவிதை தேடுகின்ற கண்கள்
அது உன்னிடமே இருக்கின்றன.
என் இதயம் மகிழ்கின்ற வார்த்தைகள்
அதுவும் உன்னிடமிருந்தே வருகின்றன.
இப்படி எனக்குத் தேவையான எல்லாவற்றையும்
நீயே வைத்துக் கொண்டிருந்தால்...
நானெதற்கு இன்னொருவரை தேட வேண்டும்.