வணக்கம் நல்லா இருக்கியளா

ஒற்றனின் தூதும்
புறாவின் கால்களும்
தோழியிடம் சொல்லி அனுப்புதலும்
தோழனிடம் கேட்கச் சொல்வதும்
சுகமாகவே இருந்தது..
அஞ்சல் அட்டையில் எழுதி
நலம் விசாரித்து
பின் குறிப்பில் மீதத்தை
தைப்பதெல்லாம்
கக்கத்தில் குடையேந்தி நேரில்
சென்று பார்ப்பதை குறைத்துவிட்டது..
ச்ச என்ன வளர்ச்சியோ முன்னேற்றமோ..??!!
--கனா காண்பவன்

எழுதியவர் : கனா காண்பவன் (25-Jul-15, 11:08 pm)
பார்வை : 84

மேலே