ராஜா காலத்தில் Facebook இருந்திருந்தால்

ராஜா காலத்தில் Facebook இருந்திருந்தால் எப்படி இருக்கும்.ஒரு கற்பனை.!

‪#‎அமைச்சர்‬ : மன்னா...மன்னா...

‪#‎மன்னர்‬ : என்ன அமைச்சரே?

#அமைச்சர் : மன்னா,நம்முடன் போர் தொடுக்க பக்கத்து நாட்டு மன்னர் படையடுத்து வருகிறார்.

#மன்னர் : காலையில் தான் "Feeling மகிழ்ச்சி with andhapuram'னு பேஸ்புக்ல ஸ்டேட்டஸ் போட்டேன்.அது அவனுக்கு பொறுக்கவில்லயா?

#அமைச்சர் : அது இல்லை மன்னா.

#மன்னர் : பிறகு எதற்கு படையுடன் வருகிறான்? நாம் Facebook ல் அவனது எல்லா போஸ்ட்டுகளுக்கும் பாரபட்சம் பாக்காமல் லைக் செய்கிறோமே.பிறகு ஏன்?

#அமைச்சர் : நீங்கள் அவனது அந்தபுறத்தில் உள்ள ராணிகளுக்கு Friend Request கொடுத்தீர்கலாமே?

#மன்னர் : ஆமாம் அமைச்சரே.அவர்களது Profile picture நன்றாக இருந்தது.அதான் Request கொடுத்தேன்.பிடிக்கவில்லை என்றால் என்னை Block செய்துவிட்டு போகவேண்டியது தானே.அதற்காக படையெடுத்து வருவது சரியல்ல.

#அமைச்சர் : மன்னா,நீங்கள் அவன் அரண்மனை காவலாளி வேலை நேரத்தில் தூங்கியதை போட்டோ எடுத்து Facebook ல் போட்டுள்ளீர்கள்.இதனால் அவர்களது நாட்டில் பெரும் சர்ச்சையாக உள்ளதாம்.

#மன்னர் : நான் வேட்டைக்கு சென்று வரும் வழியில் அவன் உறங்கியதை கண்டேன்.அதான் ஒரு போட்டோ எடுத்தேன்.

#அமைச்சர் : அதை நீங்கள் ஏன் அவனது Inbox message ல் கூறாமல்,Public post ஆக வெளியிட்டீர்கள்.
#மன்னர் : தெரியாமல் செய்துவிட்டேன் அமைச்சரே.இப்போ என்ன செய்வது?

#அமைச்சர் : உடனே பேஸ்புக்கில் Feeling sad.cold fever'னு ஸ்டேட்டஸ் போட்டு,பக்கத்து நாட்டு மன்னரை Tag செய்யுங்கள்.

#மன்னர் : இதோ.இப்பவே Login செய்து,போஸ்ட் செய்கிறேன்.

#அமைச்சர் : என்னையும் Comment box ல் மென்ஷன் செய்யுங்கள் மன்னா.நானும் வருகிறேன்.

#மன்னர் : அப்படியே ஆகட்டும். ‪#‎‬............



முகநூலில் சுட்டது

எழுதியவர் : முகநூல் (28-Jul-15, 7:58 pm)
பார்வை : 204

மேலே