அப்துல் கலாம்
இரவு வந்ததென பகலும் அழுதிடுமா!
இளமை முடிந்ததென உயிரும் பிரிந்திடுமா!
உங்கள் உருவம் மறைந்ததென உங்கள் பெயரும் இறந்திடுமா!
ஏட்டில் எழுதவில்லை உங்கள் பெயரை உங்கள் உடலோடு எடுத்து செல்ல!
எங்களின் ஒவ்வொருவர் உயிரிலும் எழுதி இருக்கிறீர்கள்!
உருவில்லை என்றாலும் எங்கள் உணர்வோடு என்றும் வாழும் உங்கள் முகம்
எங்கள் கனவுகளின் ஏவுகனையாக!