கவிட்டுரை

கைகால் உதறியழும் தொட்டில் குழந்தையென
குப்புற விழுந்த வண்டு கிடந்தது - "தயவு செய்து
நேர்த்திருப் பென்னை" கெஞ்சியது என்னை;
புரட்ட, ரீங்காரம் நன்றி சொல்லும் முகமாய்..!

அம்மா கண்டால் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொல்வாள்-
அமைதியாய்ப் போவென மண்வாசலுக்குத் தள்ளினேன்;
காலையில் கருங்கல்லுக்குக் கால்முளைத்தது போலதுஊர்ந்தது
மாலையில் இறந்துவிட்டது - கைகால் உதறியழத் தோன்றுகிறது
- எனக்கிப்போது !

எலும்பிலா உயிர்களை மரித்திடச்செய்யும் வெய்யில்போலும்
அன்பிலா உயிர்கள் மரித்திடநேரின், மனிதமென்ற
பரிணாமம் வசித்திடக் கிடைப்பது மரணக்காடுதானோ ?!

எழுதியவர் : (1-Aug-15, 12:02 pm)
சேர்த்தது : நிலாநேசி
பார்வை : 100

மேலே