காதல் நினைவுகள்
இமைகளும் தன் பணி மறந்து விழிகள் உனை ரசித்த நிமிடங்கள்
நான் முதன்முதலாய் உணர்ந்த காதல் வாசமாய்........
♥♥♥♥♥♥♥♥♥♥
காத்திருப்பை சுகமென நான் விரும்பிய நாட்கள்
நேரந்தவறிப்போன
பனிக்கால ஆதவனாய்
♥♥♥♥♥♥♥♥♥♥
நீ சிரித்து பேசிய நிமிடங்கள்
இன்னும் நீளாதா
என தாய் ஏங்கும் குழந்தையின் மழலையாய்
♥♥♥♥♥♥♥♥♥♥
பகிர்ந்துகொண்ட உணர்வுகள்
நான் சேமித்த புதையலாய்
♥♥♥♥♥♥♥♥♥♥
என மறக்கவில்லை நான் ஏதுவும்
நீ காயப்படுத்தி பேசிய
கண பொழுது தவிர
நினைவுகள் சுகமாய்
சுகமான நினைவுகள் மட்டும்
என் நெஞ்சோடு.....