தண்டனை -முஹம்மத் ஸர்பான்

கோடரியால் வெட்டப்பட்ட விறகுகள்
கொள்ளியாய் மனிதனுக்கே மாறுகின்றது,
கொடுமைகள் செய்யும் கைகள் பறிக்கும்
வண்ணமலர்கள் சவ ஊர்வலத்திலும்
பெரிய சுவரில் நினைவாய் தொங்கப்படும்
புகைப்படத்தையும் அழகாய் காட்டுகிறது.

மனிதனாய் பிறந்த ஒவ்வொருவனும்
தன்னைத்தானே முகம் பார்த்துக்கொள்கிறான்
நிழலெனும் மெய்விம்பத்தில்...........,,,,,,,

தீவினை செய்தாலும் நலமாய் தாங்கி
பிடிக்கும் மண்ணும் ஏனைய பூதங்களும்
மனிதனை மன்னித்தாலும் அவன்
இழைத்த பாவமும் தோண்டிய குழிகளும்
உனக்கே தண்டனையாய்
இறைவனால் அணியப்படுகின்றன,

எழுதியவர் : முஹம்மத் ஸர்பான் (2-Aug-15, 1:18 pm)
பார்வை : 119

மேலே