மதுவிலக்கின் பிடியில் தமிழகம்

தங்களின் அரசியல் வாழ்வாதாரத்திற்காக
இதை கையிலெடுத்துள்ளது
ஒரு கூட்டம்...

மது ஆலைகளை வைத்துக் கொண்டு
வேறு வழியின்றி மதுவை எதிர்க்குது ஒரு கூட்டம்...

விற்றவனை விட்டுவிட்டு தடுப்பவனை
தொறத்தி அடிக்குது ஒரு கூட்டம்...

எவ்வளவு எதிர்த்தாலும் தடைவிதிக்காமல்
விற்றுப் பிழைக்குது
ஒரு கூட்டம்...

கேடு எனத் தெரிந்தும்
குடித்து குடித்து அழியுது
ஒரு கூட்டம்...

இந்த கூட்டத்திற்காக
பேருயிரை இழந்து தவிக்குது
ஒரு கூட்டம்...!

எது எப்படியோ மது விலக்கை
நோக்கி தமிழகம்...

எழுதியவர் : அருண்வேந்தன் (4-Aug-15, 8:05 am)
பார்வை : 561

மேலே