அழிவை நாடும் பெண்களும் சிதைந்து போகும் புனிதமும் --கயல்விழி

தாய் தந்தை அணைப்பிற்கு
கண்ணீரில் விடைகொடுத்து .
அண்ணன் தம்பி நண்பர்க்கும்
தவிப்போடு பயணம் சொல்லி .

தாரமாய் வந்தவளை பார்போற்ற வேண்டுமென்று .
துணிகின்றான் தொழில் தேடி
தொலைதூரம் செல்வதற்கு .

கடல் கடந்து சென்றவன்
கண்ணீரில் குளிக்கின்றான் .
பாலைவன வெயில் தனில்
புழுவாக துடிக்கின்றான்.

உதிரம் உருகி வேர்வையாக
பணத்திற்காய் உழைக்கின்றான் .
துனையாளின் நினைப்போடு
காலத்தை ஜெயிக்கின்றான் .

கட்டு கட்டாய் காசு வர கணவனை அவள் மறக்கின்றாள் .
காமமோகம் தலைக்கேற
களியாட்டம் நடத்துறாள்

கட்டியவன் நம்பிக்கையை
பொடி பொடியாய் உடைக்கின்றாள்
பெண்மையின் புனிதத்தை
குழிதோண்டி புதைக்கின்றாள்.

கனவோடு காதலையும்
சுமந்து நாடு வருகின்றான்
தன்
மனையாளின் நிலைகண்டு
உயிரோடு மரிக்கிறான் .

கணவன் இன்றி கர்பமாகும்
மனைவியரே கேளுங்கள் .
வேலியாய் தாலி உண்டு பயிர்
உம்மானம் காத்திடுங்கள் ..!!


(இது இன்று பல இடங்களில் நடப்பவை .கண்ணால் கண்டதும் தான்.தவறாக நிகைக்க வேண்டாம் .இவை ஒரு சில பெண்களுக்கு மட்டும் )

எழுதியவர் : கயல்விழி (6-Aug-15, 2:37 pm)
பார்வை : 263

மேலே