இந்திப் பேரு வைக்கறது தான் நாகரிகம்
எம் பேரு காளியப்பன், உங்க தாத்தா பெரு முனியப்பன். மகனே 30 வருஷத்துக்கு முன்னாடியே சினிமா மோகத்திலே இந்திப்பேர வைக்கறதது தான் நாகரிகம் -ன்னு உனக்கு சந்தோஷ்-ன்னு பேரு வச்சேன். இப்ப எனக்குப் பேரன் பொறந்திருக்கான். அவனுக்கு மகா விஷ்ணு பேரக் குறிக்கற மாதிரி ஒரு பேரு வைக்கலாம்னு நெனைக்கிறேன். மகனே சந்தோஷ் நீ என்னப்பா சொல்லற?
அப்பா இப்பெல்லாம் தமிழ்ப் பேரைக் கொழந்தைகளுங்களுக்கு வச்சா எல்லாம் கேவலமாத்தான் நெனைப்பாங்க. அதனால உங்களுக்குப் பிடிச்ச இந்திப் பேரா வச்சிருங்க.
நாராயணன் -ங்கிறது தமிழாக்கம் செய்யப்பட்ட இந்திப் பேரு. நாராயாணா -ன்னு தெலுங்கு, கன்னடம் பேசறவங்க வச்சுக்குவாங்க. நாராயண் -ங்கறது சுத்தமான இந்திப் பேரு. அதனால எம்பேரனுக்கு நாராயண் -ன்னு பேரு வைக்கறேன். உனக்குப் பிடிச்சிருக்கா?
நீங்க தான் சொல்லிட்டீங்களே. நாராயண் -ங்கறது சுத்தமான இந்திப் பேருன்னு. அப்பறம் எனக்குப் பிடிக்காம போகுமா? ஸ்வீட் நேம் டாட்.
-------------------------------------
சிரிக்க அல்ல. சிந்திக்க.