உன்னருகில் நானிருக்கும் போது
உன்னோடு பேசுகிறேன்.....
தினமும் எனக்கு முன்னே எழுந்துவிடும்
உன் நினைவுகலல்லவா....!
என்னை எழுப்பி விடுகிறது என்றேன்.
எப்படி உன்னால்
இப்படி எழுத முடிகிறது...! என்றாய்.
எப்போதும் தேடுகின்ற என் விழிகளுக்கு
என் மொழிகளை விரும்புகின்ற
எதோ ஒரு இதயம் கிடைத்தால்
எழுதுவதெல்லாம் கவிதை ஆகாதா.. ? என்றேன்.
உறவே உன்னருகில் நானிருக்கும் போது....! என்றேன்.
போது...? என்று விழிகளில் மின்சாரம் வீசினாய்..
காலம் கடக்க விடாத
கடிகாரம் வேண்டுமென்றேன். நான்.
கண் மூடி சிரிக்கின்றாய் நீ....
அந்தக் கன நேரமே என் கண்ணுக்குள் நின்று
உறக்கம் கெடுக்கிறது இன்று வரை...
நீ என்னோடு பேசும் வரை .....