நெஞ்சே நெஞ்சே
கூந்தல் கொண்டு
நீயும் என்னைத்
தள்ளாதே..
கூடும் நேரம்
என்னை விட்டுச்
செல்லாதே..!!
உந்தன் நிழலாய் உன்னை
தொடரும் என்னை
துரத்தா தென் உயிரே..
கண்கள் இரண்டும் உன்னை
சுமக்கும் அன்னை
மறவா தென் மலரே..!!
எந்தன் நெஞ்சம்
கெஞ்சும் கொஞ்சம்
என்னில் நீயும்
ஊர்வது ஏனோ..?
காலை மாலை
போகும் சாலை
கானல் நீராய்
கலைவதும் ஏனோ..?
ஈரம் மண்ணில் பட்டாலும் அதன்
வாசம் என்னில் பற்றாது
உந்தன் சிகை தான் நுகர்வேனே
தினம் உயிராய் உணர்வேனே..!!
வீசும் காற்றும்
பேசும் உன்னில்
காதல் வார்த்தை
கடத்திய பின்னே..!!
காணும் உன்னை
கவிதை செய்வேன்
காலம் தோறும்
காதலைக் கொண்டு..!!!!
செ.மணி