சமத்துவம்
நீல வான் மேகம் பற்றி
நெடுமலை முகடு தொட்டு
கோலமாம் பனிப் படிகம் தீண்டி
கொட்டிடும் அருவி தாண்டி
சோலையின் மலர்கள்ஏந்தி
சுந்தரத் தென்றல் சேர்ந்து
காலையில் கதவு தட்டும்
கதிரவன் ஒளிக்கு மட்டும்
ஏழையின் குடிசை வீடும்
இருப்பவன் மாடி வீடும்
என்றுமே தெரிவதில்லை
இரு வேறு வடிவமாக....