இன்னமுதத் தேனோ இயம்பு - நேரிசை வெண்பா

ஒரு விகற்ப நேரிசை வெண்பா

தென்றல் தவழ்ந்திடும் தேன்மலர் பூந்தோட்டம்
என்சொல்வேன் உந்தன் எழில்தோற்றம் - அன்பேநீ!
கன்னல் சுவையோ? கனியின் சுவைதானோ?
இன்னமுதத் தேனோ இயம்பு!

ஒரு விகற்பக் குறள் வெண்பா

விழிநன் மலர்மூடும் வேல்விழி யாளின்
எழில்முகம் நீங்காதென் நெஞ்சு!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Aug-15, 8:43 pm)
பார்வை : 105

மேலே