கல்வி

எதைப் பற்றியும் பிறருக்குக் கற்றுக் கொடுக்க என்னால் முடியாது; அவர்களை சிந்திக்க வைக்க மட்டுமே என்னால் முடியும். -சாக்ரடீஸ்.

ஒரு பள்ளிக்கூடத்தைத் திறப்பவன் ஒரு சிறைச்சாலையை மூடுகிறான். -விக்டர் ஹியூகோ.

கல்வியின் வேர்களோ கசப்பானவை; ஆனால் கனியோ இனிப்பானது. -அரிஸ்டாட்டில்

நமது நண்பர்களுக்குக் கற்றுக் கொடுக்க முயற்சிப்பதைவிட நமது எதிரிகளிடமிருந்து பாடம் கற்றுக் கொள்வதே மேல்! -சார்ல்ஸ் கால்டன்.

என்னிடம் 6 நாணயமான நண்பர்கள் இருக்கின்றனர். அவர்கள்தான் எனக்கு எல்லாம் கற்றுத் தருகின்றனர். அவர்களுடைய பெயர்கள்: எங்கே?, என்ன?, எப்போது?, ஏன்?, எப்படி?, யார்? -ருட்யார்ட் கிப்ளிங்

எழுதியவர் : செல்வமணி (22-Aug-15, 3:12 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 490

மேலே