என் பாட்டிக்குப் பிடிக்காது

இங்கிலாந்தின் அரசராக இருந்த எட்டாம் எட்வர்ட் (ஆட்சி காலம் – 1936), தன்னுடைய பாட்டியான, புகழ்பெற்ற விக்டோரியா மகாராணியின் குணங்களை நன்கு அறிந்தவர்.

அவர் சிறு வயதில் பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது அவரது ஆசிரியர் ஒரு நாள், “சொர்க்கத்தில் எல்லா மனிதர்களும் ஒன்றாகவே கருதப்படுவார்கள்“ என்றார்.

அதற்கு எட்வர்ட், “ஐயா... சொர்க்கத்தில் என்னுடைய பாட்டி விக்டோரியா மகாராணி கூடவா எல்லோருடனும் ஒன்றாகக் கருதப்படுவார்?“ என்று கேட்டான்.

“ஆமாம். சொர்க்கத்தில் உயர்ந்தோர் தாழ்ந்தோர் என்ற பேதமில்லை. அரசனாக இருந்தாலும் சரி அடிமையாக இருந்தாலும் சரி... ஒன்றாகவே கருதப்படுவார்கள்.“ என்று சற்று விளக்கமாகக் கூறினார் ஆசிரியர்.

அதைக் கேட்ட சிறுவன் எட்வர்ட்டிற்குக் கோபம் வந்தது.

“என் பாட்டியை யாரென்று நினைத்துக் கொண்டீர்கள்? பிரிட்டனுக்கே மகாராணியாக இருந்தவர். அவரை மற்றவர்களுக்குச் சம்மாக நடத்தினால் அது அவருக்குப் பிடிக்காது. ஆகவே அவர் சொர்க்கத்திற்குச் செல்ல மாட்டார்“ என்று உரத்த குரலில் பேசினான்.

அதைக் கேட்டு சிரித்த ஆசிரியர், “நீ கூறுவது உண்மைதான்“ என்றார்.

படித்ததில் பிடித்தது.

அருணா செல்வம்.

எழுதியவர் : படித்ததில் பிடித்தது. (25-Aug-15, 6:35 pm)
பார்வை : 121

மேலே