காதலே மரணம் - சந்தோஷ்

உன் கூட்டில்
என் ஆன்மா.

உன் உயிரில்
என் சுவாசம்.

உன் வியர்வையில்
என் வாசம் .

என் மழையில்
நீ ஈரம்.

நீ நிலம்..
நான் உனது உரம்.

நீயென் கடல்
நானுன் ஆழம்.

நீயென் ஆகாயம்
நானுன் நீலம்.

நீயென் பறவை
நானுன் சிறகு.

நீயென் நான்
நானுன் நீ.

நானின்றி நீ மெளனம்
நீயின்றி நான் சடலம்
நாமின்றி
இந்த காதலே மரணம்..!



**

இரா.சந்தோஷ் குமார்

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (27-Aug-15, 3:33 pm)
பார்வை : 91

மேலே