அப்பனுக்கு பாடம் சொன்ன சுப்பையா
பார்சல் வாங்கி வந்த தந்தூரி சிக்கன டேஸ்ட் பண்ணுன வீட்டம்மா சொன்னாங்க.
" என்னங்க, சாப்பிட்டு பாருங்க நல்லாவே இல்ல இத போய் ஏன் வாங்கிட்டு வந்தீங்க"
டேஸ்ட் பண்ண எனக்கும் பிடிக்கல " இத சாப்பிட வேணாம் , குப்பைல போட்டுரு"
மனைவி: வேணாம் ப்ரிட்ஜ்ல வெய்ங்க, குப்ப எடுக்குற சாந்தி வரும் அவங்ககிட்ட குடுத்துரலாம்"
பக்கத்துல இருந்த என் மகன் கேட்டான் " ஏம்மா நமக்கு பிடிக்கலைன்னு சொல்லுறோம் அவங்க மட்டும் எப்படி சாப்பிடுவாங்க"
நானும் மனைவியும் என்ன பதில் சொல்லுறதுன்னு தெரியாம பார்சல குப்பைல போட்டுட்டோம்,
பல நேரங்கள்ல குழந்தைகள் ஆசானா மாறிடுறாங்க.