பெரியார் படத்தை ஏன்னே
அண்ணே பெரியார் படத்தை ஏன்னே
வீட்டுல மாட்டி வச்சிருக்கிங்க?
ம்..அப்படிகேளு உன் நெத்திய பாரு ,
ஒன்னு இல்லையே!
என் நெத்திய பாரு ஏன் அதிலும்
ஒன்னும் இல்லையே!
ஒன்னு இல்லையா
அதற்கு யார் காரணம்
ஐய்யா தானே
இல்லன்னா உன் நெத்தியில
குறுக்கா ஒருகோடு!
என் நெத்தியில
நெடுக்கா ஒரு கோடு ,
கோடு வித்தியாசம் என்றாலே
சண்டைதானேடா?.
..........................................................
பெரியாரின் போர்வாள் எம்.ஆர்.ராதா
அவர்களின் நாடகத்தில் ஒருகாட்சி.