”இது கடந்து போகும் - ”ஜென் கதை

”இது கடந்து போகும்”

துறவியிடம் சீடன் சொன்னான்: ” என்னுடைய தியானம் மிகவும் கொடுமையாக இருக்கிறது. என் கவனம் முழுக்க சிதறி விடுகிறது. கால்கள் வலிக்கிறது. நான் சற்று தியானம் செய்ய ஆரம்பித்த சிறிது நேரத்தில் தூங்கி விடுகிறேன். மிகவும் கொடுமையாக இருக்கிறது”

துறவி சொன்னார்: ”இது கடந்து போகும்”



சில நாட்கள் கழித்து துறவியிடம் சீடன் சொன்னான்: ”இப்போதெல்லாம் என் தியான அனுபவம் அற்புதமாக இருக்கிறது. தற்போதெல்லாம் விழிப்புணர்வுடன் இருக்கிறேன். மிகவும் அமைதியான இருக்கிறேன். மிகவும் அற்புதமாக இருக்கிறது”

துறவி சொன்னார்: ”இது கடந்து போகும்”

இந்த ஜென் சிறுகதை உணர்த்தும் நீதி:மாற்றம் ஒன்றே மாறாதது. (The only thing doesn’t change is “Change “)

நானறி: தமிழ்வளம்

எழுதியவர் : ஜென் கதை (8-Sep-15, 4:11 pm)
பார்வை : 348

மேலே