வினோத திசை-சந்தோஷ்

விவரிக்க முடியாத
ஆயிரமாயிரம் உணர்வுகள்
புதைந்திருக்கிறது
என் பொக்கிஷமனதில்..!

சொற்கள் கிடைக்காத
கோடானகோடி கவிதைகள்
பாதுகாக்கப்பட்டிருக்கிறது
என் கருவூலமனதில்..!

மொழிகளுக்கு வசப்படாத
ஆகாய நீளக்கதைகள்
எழுதப்பட்டிருக்கிறது
என் சிறகுமனதில்..!

மனதிலுள்ளவைகளை
இலக்கியத்து காப்பியமாக்கிட
எனக்குத் தேவை
பிரபஞ்ச நீளத்தில்
ஒரு தாளும்
தீர்ந்துவிடாத மையோடு
ஓர் எழுதுகோலும்..!

இதோ... இதோ
எனது
தனிமையின் பயனாக
வேண்டப்பட்ட
தாளும் கோலும்
கிடைத்தாகி விட்டது
எனது கற்பனைக்கோளத்தில்
நான் கண்டறிந்த
புதியதாய் முளைத்த
வினோத திசையில்...!


**
இரா.சந்தோஷ் குமார்.

எழுதியவர் : இரா.சந்தோஷ் குமார் (11-Sep-15, 12:12 am)
பார்வை : 112

மேலே