கண்ணீருடன் நின்றாள்

இந்த ஜென்மத்தில் ....
உன்னை பிரியேன் உயிரே ....
என்றான் அவன் .....!
அப்போது அடுத்த ஜென்மம் ...
ஒன்று உண்டோ என்றாள்....?

அப்போ இந்த ஜென்மத்தில்
பிரிவதற்கு வாய்ப்பு உண்டோ ...?
கேட்டபடியே கண் நிரம்பி ...
வழியும் கண்ணீருடன் நின்றாள் ....!!!

+
குறள் 1315
+
புலவி நுணுக்கம்
+
இம்மைப் பிறப்பில் பிரியலம் என்றேனாக்
கண்நிறை நீர்கொண் டனள்.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 235

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (12-Sep-15, 12:46 pm)
பார்வை : 65

மேலே