ஓகோ உம்மை நினைப்பதற்கு

என்னவனுக்கு .....
தும்மல் வந்தது -நான் ...
சந்தேகம் கொள்வேன் ..
என்பதற்காக தும்மலை ....
அடக்கினான் .....!!!

ஓ .....ஓகோ ...
உம்மை நினைப்பதற்கு ....
நிறையப்பேர் உள்ளனரோ ....
எனக்கு மறைக்கிறீரோ....
என்று அழுதபடியே ஊடல் ...
செய்தாள்....!!!

+
குறள் 1318
+
புலவி நுணுக்கம்
+
தும்முச் செறுப்ப அழுதாள் நுமர்உள்ளல்
எம்மை மறைத்திரோ என்று.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 238

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (13-Sep-15, 10:02 am)
பார்வை : 75

மேலே