என்னை அப்படி பார்க்கவேண்டாம்
பேசினால் தானே ...
பிரச்சனை பேசாமல் ....
இருந்து அவளின் அங்கத்தை ....
பார்த்துகொண்டிருந்தான் ....!!!
ஓ ...யாருடைய மேனிபோல் ....
என் மேனி இருக்கிறது என்று ....
பார்க்கிறீரோ ....? சீ சீ சீ
என்னை அப்படி பார்க்கவேண்டாம் ...
சினங்கொண்டாள் அவள் ....!!!
+
குறள் 1320
+
புலவி நுணுக்கம்
+
நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று.
+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால்
+
கவிதை எண் - 240