சாட்சி கையெழுத்து போடலாமா கூடாதா சாட்சி கையெழுத்து போட்டால் பிரச்னை வருமா

சாட்சி கையெழுத்து போடலாமா? கூடா தா? சாட்சி கையெழுத்து போட்டால் பிர ச்னை வருமா?

பிரச்னையில் மாட்டாமல் இருக்க வேண்டுமெனில் எப்படி ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என பல கேள்விகளை உயர்நீதிமன்ற வழக்கறி ஞர் ரமேஷிடம் கேட்டோம்.
விளக்கமா க எடுத்துச் சொன்னார் அவர்.

கையெழுத்து கட்டாயம்!

”சாட்சி கையெழுத்து என்பது எந்த ஒரு ஆவணத்திலும்
கையெழுத்து இட்டதற்கு சாட்சியா க இரண்டு நபர்களை கையெழுத்து போட வைப்பதுதான்.

அதாவது, அந்த ஆவணத்தில் கையெழுத்து போட்டவர் இந்த நபர்தான் என்பதை ஊர்ஜிதப்படுத்தும் வகையில் போடும்
கையெழுத்துதான் சாட்சி கையெழுத்து.

பதிவுத் திருமணம், பத்திரப் பதிவு, உயில் எழுதுவது, பாகப்பிரிப்பு பத்திரம் போன்ற ஆவணங்களில் சாட்சி கையெழுத்து போடுவார்கள் . பொதுவாக குறைந்தபட்சம் இரண் டு சாட்சி கையெழுத்து வாங்குவது வழக்கமாக உள்ளது. சில ஆவண ங்களில் சாட்சி கையெழுத்தைக் கட்டாயமாக வைத்துள்ளது சட்டம். உதாரணமாக, உயில், தானம் போன்ற ஆவணங்களில் சாட்சி கையெழுத் து அவசியம்.

கட்டாயமில்லை!

சில ஆவணங்களில் சாட்சி கையெழுத்து வாங்குவது சட்டப்படி கட்டாயம் இல்லை என்றாலும், தொன்றுதொட் டு வந்த பழக்கத்தால் சாட்சி கையெழுத்து போடப்படுகிற து. இந்த ஆவணங்களில் சா ட்சி கையெழுத்து இல்லை யென்றாலும் அந்த ஆவண ம் செல்லுபடியாகும். இதற் கு உதாரணம் புரோநோட். பொதுவாக புரோ நோட்டில் சாட்சி கையெழுத்து வாங்குவது வ ழக்கம். ஆனால், சட்டப்படி புரோ நோட்டில் சாட்சி கையெழுத்து இல்லையென்றாலும் செல்லு ப டியாகும். பாதுகாப்பிற்காக சாட் சி கையெழுத்து வாங்கப்படுகிற து.

கேரன்டி Vs சாட்சி கையெழுத்து!

வங்கியில் கடன் வாங்கும்போது கேரன்டி கையெழுத்து கேட்பார்கள். கேரன்டி கையெழுத்து என்ப து கடன் வாங்கும் நபர் கடனை திரும்பச் செலுத்தவில்லை எனி ல் கேரன்டி கையெழுத்து போட்டவர் தான் அந்த கடனை திரும்பச் செலு த்த கடமைப்பட்டவர் ஆவார். நேரடி யாக கடன் வாங்கிய நபரை அணு காமல் கேரன்டி கையெழுத்து போ ட்டவரிடமே கடனை கேட்க வங்கி க்கு உரிமை உண்டு. அந்த கடனில் அவருக்கும் பங்குண்டு என்பதே கேரன்டி கையெழுத்தின் சாராம்சம்.

ஆனால், சாட்சி கையெழுத்து அப்படியில்லை. எந்த ஆவணமாக இருந்தாலும் அந்த ஆவணத்தை எழுதிக் கொடுத்தவர் எனக்கு முன்பாகதான் கையெழு த்து போட்டார் என்பதை ஊர்ஜிதப் படுத்த கையெழு த்து போடுவதுதான் சாட்சி கையெழுத்து. கேரன்டி கை யெழுத்துக்கும், சாட்சி கையெழுத்துக்கும் நிறை ய வித்தியாசங்கள் இருக் கிறது. ஆவணத்தில் தனக் கு முன்பாக அதை எழுதிக் கொடுத்தவர் கையப்பமிட்டார் என்பதற்கு ஆதாரம்தான் சாட்சிக் கையெழுத்து. அதற்கு மட்டுமே சாட்சி பயன்படுவார். தவிர, அந்த ஆவணத்தில் இருக்கும் மற்ற விஷயங்களுக்கு சாட்சி கையெழுத்து போட்டவர் பொறுப்பாக மாட் டார்.

சாட்சி கையெழுத்து போடும்போது அந்த ஆவண த்தில் இருக்கும் சங்கதிகள் அல்லது தகவல்கள் சாட்சி கையெழுத்து போடும் நபருக்கு தெரிந்திரு க்க வேண்டிய அவசியமில்லை. அதாவது ஆவண த்தின் தன்மை, உரிமை மாற்றம் என எதுவாக இருந்தாலும் அதை சாட்சி தெரிந்து கொள்ள, தெரிந்திருக்க வேண்டிய அவசிய மில்லை.

உதாரணமாக, உங்கள் வீட்டை போலியாக வே று ஒரு நபர் விற்கிறார். அந்த ஆவணத் தில் சாட்சியாக உங்களிடமே கை யெ ழுத்து வாங்குகிறார் எனில், நீங்கள் சாட்சி கையெழுத்து போட்டதனாலே யே அந்த வீட்டை விற்க நீங்கள் ஒப்பு க் கொண்டதாக ஆகிவிடாது. நீங்கள் அந்த ஆவணத்தின் தரப்பினராக சட்டப்படி கருதப்பட மாட்டீர்கள்.

ஆனால், சில விதிவிலக்கான நேரத்தில் சாட்சி கையெழுத்து போடுபவருக்குச் சிக்கல் வரவாய்ப் பிருக்கிறது. அதாவது, நெருங்கி ய உறவினர் தயாரித்த ஆவண த்தில் கையெழுத்து போடுகை யில் அந்த ஆவணத்தில் இருக்கும் தன்மை உங்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பிருக்கிறது.

உதாரணமாக, ஒரு தந்தை தனது மகளுக்கு ஒரு சொத்தை செட்டில் மென்ட் செய்து கொடுக்கிறார் எனில், அப் போது தனது மகனை அந்த செட்டில்மென்ட்டாக் குமென்டில் சாட்சியாக கையெழுத்து போட வைக்கிறார்.

இந்த சூழ்நிலையில் அந்த மகன், ‘அந்த டாக்குமென் டில் இருக்கும் தன்மை எனக்கு தெரியாது’ என சொல்வது நம்பும்படியாக இருக்காது.

என்ன சிக்கல் வரும்?

சாட்சி கையெழுத்து போடுபவருக்கு என்ன சிக்கல்வரும்? தற்போ து நில அபகரிப்பு மோசடிகள் அதிகமாக நடைபெற்று வருகிற து. ஒரு நிலத்தை ஒருவர் பெயரி லிருந்து இன்னொருவர் பெயரு க்கு விற்கும்போது அந்த நபர்கள் போடும் கையெழுத்தை ஊர்ஜி தப்படுத்தும் வகையில் சாட்சி கையெழுத்து போடும் நபர் கை யெழுத்து போடுவார். ஏதாவது பிரச்னை வரும்போது இந்த நிலத் தை நான் விற்கவில்லை இந்த கையெழுத்து என்னுடையது இல் லை என அந்த நிலத்தை விற்ற நபர் கள் சொல்லும்போது. அல்லது பு ரோநோட்டை எழுதி கொடுத்தவர் அ தில் உள்ள கையெழுத்தை மறுக்கு ம்போது அந்த ஆவணத்தில் சாட்சி கையெழுத்து போட்ட நபர்களை நீதி மன்றம் விசாரணைக்கு வரச் சொல் லும். இந்த இடத்தில்தான் சாட்சி கை யெழுத்து போடும் நபருக்கு பொறுப்பு வருகிறது. அந்த ஆவணத்தில் கையெழுத்து போட்டது இவர்தான் என சாட்சி கையெழுத்து போட்ட நப ர் சொல்லும் சாட்சிதான் மிக முக்கி யமாக கருதப்படும். இந்த நேரத்தில் மட்டும்தான் சாட்சி கையெ ழுத்து போட்டவர் நீதிமன்றத்திற்கு அழைக்கப்படுவார்.

எந்த விவரமும் தெரியாமல் ஒருவர் சாட்சி கையெழுத்து மட்டும் போட்டிருந்தால் எ ந்தவித பாதிப்பும் ஏற்படாது. ஒருவேளை சாட்சி கையெ ழுத்து போடுபவரும் போலி நில விற்பனைக்கு உடந் தையாக இருந்திருந்தால், பிரச்னைகளை சந்திக்க நேரிடும். போ லியான ஆவணங்கள் தயாரிக்க சாட்சி கையெழுத்து போடுபவர் கள் உடந்தையாக இருந்து வி டாமல் கவனமாக இருப்பது நல் லது.
நன்கு தெரிந்தவர் உங்களிடம் கேட்டுக் கொண்டால் ஒழிய, முன்பின் தெரியாதவர்களுக்கு சாட்சி கையெழுத்து போட வேண்டாம். சிலர் நூறு அல்லது இருநூறு கொடுப்பதாகவும் ஆசை காட்டுவார்கள். பணத்திற் காக ஆசைப்பட்டு யார் யாருக்கோ கையெழுத்து போட்டால் பிற்பாடு நீதிமன்றத்தின் படிகளை அடிக்கடி ஏற வேண்டியிருக்கும்!

விகடன் வார இத‌ழிலிருந்து .

எழுதியவர் : செல்வமணி - (வலையில் படித்த (14-Sep-15, 9:10 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 540

சிறந்த கட்டுரைகள்

மேலே