வைகைமணல் எங்கே - இரு விகற்ப நேரிசை வெண்பாக்கள்

தண்ணீர் வரும்எங்கள் வைகையில் கைவைத்தால்
விண்பொய்யா எங்கள் வளநாட்டில் – எண்ணியே
பார்க்கவும் எங்குமில்லை நல்மணலை பாலவேலை
பார்ப்பதற்கே! யார்குற்றம் சொல்!

கொட்டிக் கிடக்குது கொண்டுவந்த நல்மணல்;
எட்டிநின்று பார்த்தேன் தரையெங்கும் – கட்டிநிற்கும்
புல்மேடு! வைகைமணல் எங்கே! அதில்பெருகும்
எல்லையில்லா நீர்தான்எங் கே?

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (15-Sep-15, 5:52 pm)
பார்வை : 89

மேலே