என் விழிகளும் தூறல் போடுதடி 555
என் அன்பே...
எனக்கு தூக்கம் கலைந்தது
கனவில் உன் கொலுசு சத்தம்...
என் ஞாபகங்களில் எல்லாம்
உன் நிழல் பூத்து கிடக்கிறது...
நான் தனிமையில்
அமர்ந்தால்கூட...
உன் நினைவும் என்னுடனே
வந்து அமர்ந்துவிடுகிறது...
உன் நினைவுகளை எனக்கு
கொடுத்துவிட்டாய்...
கொடுத்த இதயத்தை
மட்டும் ஏனடி...
அன்று நாம் இருவரும்
நடைபோட்டபோது...
கார்மேகம் தூறல்
நமக்காக போட்டது...
இன்று நான் மட்டும்
தனிமையில் நடைபோட...
என் விழிகளும்
தூறல் போடுதடி...
உன் நினைவுகளை
நினைத்து.....