அவள்

அவளிடம் பேசியப்பின்
அழகாகத் தோன்றுகிறேன்...

அவளின் நம்பிக்கையில்
நான் யாரென உணர்கிறேன்...

அவள் வார்த்தைகளின் வசியங்கள்
எனக்குக் கிடைத்த வரமாக...

எனது மகிழ்வான தருணங்களின்
பின்புலத்தில் மறைந்துகிடப்பவள்...

பாசாங்கு செய்யத்தெரியவில்லை...
பகல் கனவு காண்பதுவுமில்லை...

எனது ஒவ்வொரு நொடியும்
அவளின் நினைவினைத்தானே
நுகர்ந்து செல்கிறது...

நிலவினைக் காய்ச்சி
பருகுவாள் போலும் என
ஒளிரும் அவள் முகம் காணுகையில்
எனக்கு தோன்றும்...

பாவையின் நினைவுகளே போதும்
பசியாறுவதற்கு...

என் நெஞ்சத்தில்
அஞ்ஞாதவாசம் கொண்டிருப்பவள்...

அந்தகாரம் சூழ்ந்த என் இதயத்தில்
அகலாய் தோன்றியவள்...

இத்தனை அழகான உள்ளம் எவருக்கும் இல்லை...

பெண்களின் பொறாமைக்குப்
பொருத்தமானவள்...

எழுதியவர் : நித்திலம் ரமேஷ் (20-Sep-15, 7:14 am)
Tanglish : aval
பார்வை : 150

மேலே