நிறைய தவறு செய்பவர்களே

படிக்க வேண்டும் ....
படித்தற்போல் நடக்க வேண்டும் ....
படித்ததை மற்றவருக்கு ....
சொல்லியும் கொடுக்கவேண்டும் ....
இவர்களே அறிவுடையோர் ....!!!

நிறைய படித்து .....
நிறைய அறிந்து ....
நிறைய தவறு செய்பவர்களே .....
அறிவற்றவர்களின் முதன்மை ....
இடத்தவர் ஆவர் ,,,,!!!

+
குறள் 834
+
பேதைமை
+
ஓதி உணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப்
பேதையின் பேதையார் இல்.
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 54

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (23-Sep-15, 4:01 pm)
பார்வை : 87

மேலே