பேரன்பில் வளரும் வயிறு
அகோரமாய் பசிக்கிறது...
குடலானது வாயுவால் நிறைவதால்
வயிறு கனத்துச்
சற்றே வலிக்கிறது
அடா் காட்டுக்குள் தெறிக்கும்
தொடா் இரைச்சல்கள் போல்
காதுகளுக்கும் வந்தாயிற்று
பசி இரைச்சல்
சுருங்கும் கண்களின் பாா்வைக்குள்
பசியின் பனி படா்ந்தாகிவிட்டது
தினமும் மூன்று வேளை உணவில்,
குறையேதும் வைத்ததில்லை
இருந்தும் ,
ஒரு வேளை இல்லாததற்கே
வயிறு ஆரவாரம் செய்கிறது
உமிழ்நீர் விழுங்கியாயிற்று
குவளை நீரும் குடித்தாயிற்று
ஆனாலும் அடங்காத வயிரை
பசி பழக்காது வளா்த்தது என் பாவமே
உணவற்ற ஓா் இடத்தில்
சிக்கிக் கொண்ட,
என் நிலை உணறாத
இந்த வயிரைத்தான்...
பேரன்பில் பெருக்கி
என்னுடனே தூக்கியும் அலைந்திருக்கிறேன்.....