நானுனக்குச் சூட்டிடும் நற்கொலு சிதுவே

முகநூலில் படம் பார்த்துக் கவி எழுதினேன்.....

ஆசிரியப்பா !

நண்பகல் போழ்திலே நல்லொளி வீசிடும்
மன்பெருஞ் சூரியன் மாயிருள் வேளையில்
வந்திடும் வெண்ணிலா வென்னுந்தன் மனைவிக்குத்
தந்திடும் ஒளியெனும் தனியொரு அணிகலன் !
எக்கால மானாலும் தீரா தொளிர்விடும்
இக்காதல் தன்னையு மொத்ததே
நானுனக்குச் சூட்டிடும் நற்கொலு சிதுவே !

-விவேக்பாரதி

எழுதியவர் : விவேக்பாரதி (26-Sep-15, 4:45 pm)
பார்வை : 80

மேலே