நானுனக்குச் சூட்டிடும் நற்கொலு சிதுவே
முகநூலில் படம் பார்த்துக் கவி எழுதினேன்.....
ஆசிரியப்பா !
நண்பகல் போழ்திலே நல்லொளி வீசிடும்
மன்பெருஞ் சூரியன் மாயிருள் வேளையில்
வந்திடும் வெண்ணிலா வென்னுந்தன் மனைவிக்குத்
தந்திடும் ஒளியெனும் தனியொரு அணிகலன் !
எக்கால மானாலும் தீரா தொளிர்விடும்
இக்காதல் தன்னையு மொத்ததே
நானுனக்குச் சூட்டிடும் நற்கொலு சிதுவே !
-விவேக்பாரதி