விடியல் பிறக்கும்,,,
நான் எழுதி வெளியிட்ட புத்தகம் எளிய நடையில் தமிழ் பாடல்கள் .. அதிலிருந்து ஒரு தத்துவ பாடல் இங்கே சமர்பிக்க பட்டுள்ளது...
சத்தமில்லாமல் அழுது நீ
கண்ணீரை வீணடிக்காதே
காதுபட பேசும் மனிதரை கண்டு
நீ அஞ்சிவிடதே
சட்டென்று கோபப்பட்டு எதையும்
நிறுத்தி விடாதே
வீணாய் போன இந்த மக்களுக்காக
உன் வாழ்வை துளைத்து விடாதே
பொங்கி ஏழு... உன் உள்ளே இருக்கும்
குமுறலை வெளிக் கொண்டுவா .....
விடியல் பிறக்கும் நிச்சயம்......
திருமதி மைதிலி ராம்ஜி