சீரியல் அழுகை விட்டு விட்டு விளம்பர இடைவேளை

★ கடவுளே பிரகாஷுக்கும் சத்தியாவுக்கும் பணம் கிடைச்சு ஜெய்ஹிந்த் விலாஸ மீட்டு அவங்க சந்தோசமா இருக்கனும்...

★ பொன்னுரங்கத்துக்கு மீண்டும் அந்த குழந்தை கிடைக்கனும், பூமிகா வாழ்க்கை நல்ல படியா இருக்கனும்...

★ வேட்டையன நல்லபடியா புரிஞ்சுக்கிட்டு மீனாட்சி அவன் கூட சேர்ந்து வாழனும்....

★ ஆதிராவுக்கும் அவளோட கணவனக்கும் அந்த பேயால ஆபத்து வரவே கூடாது...

★ சீதாவுக்கு இன்னும் எவ்வளவுதான் சோதனைய குடுப்ப இனிமேலாவது அவ நல்லா இருக்கனும்...

★ குலதெய்வத்துல ரெண்டு குடும்பமும் சீக்கிரமா ஒன்னா சேர்ந்து சந்தோசமா இருக்கனும்...

★ தலைமுறை தான்டி ஓடாம சீக்கிரமா வாணி ராணிக்கு ஒரு முடிவ தரனும்...

வாழ்க்கையில எத்தனை சேனல்களடா அதில்தான் எத்தனை சீரியல்களடா...
அதில்தான் எத்தனை குடும்பங்களடா...
அய்யகோ அழுதது போதும் ஒரு முடிவ கொண்டு வாப்பா... ஆண்டவா..

எழுதியவர் : செல்வமணி (27-Sep-15, 11:26 pm)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 130

மேலே