உன்னால் நான்
வெட்கம் கூட வெட்கப்பட்டுதான்
உரசுகிறது உன்னை..
கோபம் உன்னிடம்
கெஞ்சுகிறது ஒருமுறை
கோபித்து கொள்ள மாட்டாய என்று!
உனக்கு அடிமை நான்
என்று தலைவணங்கி
சொல்லிவிடும் அன்பு....!
கண்ணீர் விட வைத்துவிட்டேன்
என கலங்கி வருகிறது கண்ணீர்
இப்படி உன்னை நினைக்க
வேண்டாம் என்று
உன் நினைவு அலைகளில்
நான்......!