நட்பின் பிரிவு துன்பம் இல்லை

நட்பின் பிரிவு ஒன்றும் .....
துன்பம் இல்லை ....
அறிவற்றவருடன் நட்பு .....
கொண்டால் பிரிவு ....
துன்பமில்லையே....!!!

அறிவற்ற பேதையுடன் ....
பழகிய நட்பு இனிமை ...
அதை பிரிந்து செல்வதும் ....
இனிமையே ....!!!

+
குறள் 839
+
பேதைமை
+
பெரிதினிது பேதையார் கேண்மை பிரிவின்கண்
பீழை தருவதொன் றில்
+
திருக்குறளும் கவிதையும் - நட்பியல்
+
கவிதை எண் - 59

எழுதியவர் : கவிப்புயல் இனியவன் (30-Sep-15, 4:56 pm)
பார்வை : 327

மேலே