இயற்கை விவசாயி

வளம் தரும் பூமித்தாயே
உனக்கருந்த விஷம் நானும் தருவேனோ!!

வாழ்வு தந்த என் பூமித்தாயே
உன் வயதை நானும் கெடுப்பேனோ!!

ஒத்த வெத நெல்லப்போட்டா
கொத்து கொத்தா தரும் தாயே
உன் பச்ச வண்ண துகில் உரித்து
உன் கற்பை நானே கெடுப்பேனோ!!
உனை கூறு போட்டு வித்துப்புட்டு
தாய்ப்பாலுக்கு வரிசைல நிப்பேனோ!!

என்ன பெத்த தாயே கூட
ஒரு முறதான் வலி சொமந்தா:
நித்தம் நித்தம் வலி சுமக்கும்
நீயே என் முதல் தாயன்றோ!!

யூரியா மூட்டையால
செடிக்கேதும் சக்தி இல்ல.
அது வெடிமருந்த விக்கப்போட்ட
வெளிநாட்டு யுக்திதானே.

பழைமைய எல்லாம் பழசுன்னு சொல்லிப்புட்டு
வெசத அமுதமுனு
"விஞ்ஞானிங்க" சொல்லுவாங்க.

வெதையில்லா பழமுன்னு
வெளம்பரம் செஞ்சிட்டு - வெதைக்கு
வெளிநாட்டுக்காரன கையேந்தி நிப்பாங்க.

விதிய நொந்து பயனென்ன?
இனியாது விவசாயி அருமை தெரிஞ்சவன்
என்னப்போல ஆளனும் நம் மண்ண....

எழுதியவர் : மு.ஜெகன் (6-Oct-15, 1:37 am)
Tanglish : iyarkai vivasaayi
பார்வை : 1197

மேலே