வண்டை காதலிக்கத் துடிக்கும் காகிதப் பூ

" வண்டை காதலிக்கத் துடிக்கும் காகிதப் பூ "

ரீங்காரம் பாடும்
வார்த்தையில் கவனம் தேவை என்று
வண்டைப் பார்த்து
கர்ஜிக்கிறது ஓர் அற்பக் காகிதப் பூ

மூளை அது மலமாய்
இறை அது அற்பமாய்
மானம் அது குற்றமாய்/கற்பாய்...என்று

காகிதப் பூவை ப் பார்த்து ஓர் அர்த்த ரீங்காரம் பாடுகிறது வண்டு

காகிதப் பூ கர்ஜனை ஓயவில்லை...தொடர்கிறது...

உ என்ற உயிர் மேல் ஏறி அமர்ந்து இருக்கும் உயிர்மெய்
ஊ என்ற உயிரைப் படைத்த

எழுத்து அறிவித்த இறைவனுக்கு
உயிரைப் படைப்பதற்கு கவனம் தேவை என்று
இறைவன் மேல் துப்பு என்று

வண்டு ரீங்கார மொழியில் எச்சரிக்கிறது காகிதப் பூவை

தரணியில்...
காகிதப் பூ தமிழோ தேனொழுகி மணக்கும் !?
வண்டு உமிழ் தேன் ஒழுக்கும் தமிழ் அன்றோ இனிக்கும் !!!

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (8-Oct-15, 2:24 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன் (தேர்வு செய்தவர்கள்)
பார்வை : 45

மேலே