விலை மாதர்கள்

காகிதப் பூக்கள் நங்கள்...
கடவுளின் காலடியில் சேருவதில்லை....
தேவர்களின் அடியாள் நாங்கள்...
தேவ வாழ்க்கை வாழவில்லை....
முறை கெட்டு நடந்தவனும் இங்கே
முறையாக வரலாம்...
தேவர்களுக்கு அமுதத்தை மோகினி கொடுத்தாள்
இங்கே
காம அரக்கர்களுக்கு தெவிட்டாத
முத்தமுதம் தருகிறோம்....
மாதவிகள் பெற்ற மணிமேகலைகள்....
மதாவிகலகவே மாற்ற படுகிறார்கள்....
தென்றல் வந்து சிராட்டினாலும்
எங்கள் வாழ்வில் வசந்தம் இல்லை....
நீதி தேவதை எங்கள் நிலையை பார்க்க வேண்டாம் என
கண்களில் கருப்பு துணி கட்டிகொண்டாள்......
கட்டம் போட்டு காவல் துறை கைது செய்ய
சட்டம் குற்றவாளிகளென்று அந்தஸ்து தருகிறது
இந்த துரியோதனன் காலத்தில்.....

எழுதியவர் : ranatheeran (9-Oct-15, 4:53 am)
Tanglish : vilai maadhargal
பார்வை : 108

மேலே