விடா முயற்சி
அந்த வார இதழிலும் அவன் அனுப்பிய கவிதைகள் பிரசுரமாகாததைக் கண்டவன், வீட்டின் மூலைக்குச் சென்று கண்ணுக்கு அருகில் இருந்த வியர்வையைத் துடைத்து விட்டு, பக்கத்தில் கிடந்த நாற்காலியில் அமர்ந்து, எப்பொழுதும் போல கவிதை எழுத ஆரம்பித்து விட்டான்... அதே வார இதழுக்கு அனுப்பவதற்காக.... இன்னும் சிறப்பாய்...