தோல்வி கண்டு துவளாதே
பந்தயத்தில் ஒருவனுக்குதான் வெற்றி நிச்சயம் ...அதில் ஒடுபவனுக்கும் அது புரியும்
பந்தயத்தில் ஒருவனுக்கே எப்பொழுதும் வெற்றி கிடைத்ததில்லை .....
முயலின் வேகம் ஆமைக்கு கிடையாது ஆமையோடு ஆமை ஓடினாலும் எல்லோருக்கும் வெற்றி கிடையாது
முயலோடு முயல் ஓடினாலும் வெற்றி எந்த முயலுக்கென்று சொல்லிடமுடியாது ...
காதலிக்கும் அனைவருக்கும் காதல் வெற்றியை தந்ததில்லை காதல் இல்லாமல் உலகம் இல்லை...
காதலில் யாரும் வெற்றியை மட்டும் சந்தித்தது கிடையாது தோல்வி அடைந்தவர் வாழ்க்கையை முடித்துகொண்டதும் கிடையாது...
மருத்துவன் என்ன படித்திருந்தாலும் மரணத்தை எப்பொழுதும் வென்றது கிடையாது .....
மருத்துவன் தொட்டவறேல்லாம் பிழைத்துவிட்டால் அங்கு மரணத்திற்கு வெற்றி கிடையாது
மனதில் நின்றதனைத்தும் தேர்வில் வருவதில்லை அதற்காக அனைவரும் தோல்வியை சந்திப்பதில்லை ...
தோல்வி சந்தித்த அனைவரும் வெற்றியை சந்திக்காமல் இருந்ததும் கிடையாது...
தோல்வி கண்டு துவளாதே துவண்டாள் வாழ்வில் வெற்றி கிடையாதே....