ஆறாத காயம்

நண்பர்களுக்குள் ஒரு சின்ன பிணக்கம்.. உயிர்த்தோழர்கள் இப்படியா.. என ஒவ்வொருவரும் கேட்கத்துவ‌ங்கினர்.. பேசாமல் இருந்து வந்தவர்கள் இப்போது பார்ப்பதை கூட தவிர்க்க ஆரம்பித்தனர்... இது இவர்களின் மனைவிமார்களுக்கு தெரிய வந்தது.. என்ன செய்யலாம்... என யோசித்தவர்களுக்கு ஒரு யோசனை தோன்றியது...

நண்பர்கள் இருவரும் குளிக்கப் போன நேரம் பார்த்து, மனைவிகள் அவர்களது மொபைலை எடுத்து, வாட்ஸ் அப்பில் "ஐ ம் சாரி" என்று ஒரு மெசேஜ் அடுத்தவர் மொமைலுக்கு அனுப்பினர்... அவர்கள் குளித்து வந்ததுமே, "இப்படி ஒரு மெசேஜ் வந்ததே" என்று தெரிவிக்க, அடுத்த நொடி, ஒரு பூரிப்புடன் நண்பனுடன் பேச, கால் செய்ய ஆரம்பித்தவர்கள் தான்.... கடந்த கால் மணி நேரமாக இருவரின் மொபைலும் பிஸியாகவே உள்ளது..

ஒரு மூணு வார்த்தையில் ஆறாத காயம் கூட ஆறிப்போக வாய்ப்புண்டு...

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (11-Oct-15, 9:06 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : aaraatha KAAYAM
பார்வை : 203

மேலே