நீ காதல்கொள்

சொல்ல வந்த சொல்லை
விழுகியதுண்டா?

மௌனத்தை தவம் கேட்டு
அலைந்ததுண்டா?

யாருக்கும் தெரியாமல்
அழுததுண்டா?

எல்லாம் தெரியும் நீ
காதல்கொள்!!


உனக்குள்ளே நீ புலம்புவாய்!

உறக்கத்தில் சிணுங்குவாய்!

கவிதைகள் கிறுக்குவாய்!

காகிதத்தை கசக்குவாய்!

எல்லாம் நடக்கும் நீ
காதல்கொள்!!


உந்தன் பெயரை நீ மறக்ககூடும்!

உன்னை சுற்றி இருப்பதெல்லாம்
நீ மறந்தபோக நேரும்!

உன் மூளையில் அவள் முகம்
மட்டுமே பதியக்கூடும்!

உன் மனதில் அவள் காதல்
மட்டுமே நிறையக்கூடும்!

எல்லாம் கூடும் நீ
காதல்கொள்!


பூக்களிடம் நீ நலம் கேட்பாய்!

தென்றலுக்கு கொஞ்சம் இடம்
கொடுப்பாய்!

மேகத்தில் அவள் முகம் காண்பாய்!

நிலவுடன் ஒத்திகை நடத்துவாய்!

எல்லாம் செய்வாய் நீ
காதல் கொள்!!


இறகு மோதியே உன்னால்
உடைந்து போக முடியுமே!

பறவையின் சிறகு இல்லாமல்
உன்னால் பறந்தே போக முடியுமே!

காற்றில்லாமல் உன்னால் நிலவில்
உயிர் வாழ முடியுமே!

தெரிந்தவரோ தெரியாதவரோ
பிறர்க்கு உன்னால் உதவ முடியுமே!

எல்லாம் முடியுமே நீ
காதல் கொள்!


காதல் கொண்டால் சாத்தியமில்லாதது ஏது?என்பதை
பிறகு உணர்ந்து கொள்!!

எழுதியவர் : (14-Oct-15, 10:27 pm)
சேர்த்தது : Ijaz R Ijas
Tanglish : nee kaathalkol
பார்வை : 103

மேலே