மனிதனெனும் மிருக வேடம்

கண்டால் பயம் வரும் காளியாக
கந்தனாக கணபதியாக
சிவனாக சித்தனாக..
தன் மூத்தகுடி மந்தியாக
மானாக புலியாக
ஆண் பெண்ணாக
பெண் ஆணாக
திருடன் காவலனாக
காவலன் திருடனாக
வேடம் தரித்து விரதமிருந்து
ஓரு மாதமோ ஒன்பது நாளோ
ஊருக்கெல்லாம் சாமியாய் தெரிந்தவன்
வேண்டுதல் நிறைவேற்றி வேடம் கலைத்து
அடுத்த நாள் முதல் போட்டுக் கொள்கிறான்
மனிதனெனும் மிருக வேடம்..

எழுதியவர் : மணி அமரன் (20-Oct-15, 5:07 pm)
Tanglish : manitha vedam
பார்வை : 205

மேலே