திகில் கதை ==இதயம் பலவீனமான இளைஞர்கள் யாரும் படிக்க வேண்டாம்==

திக்! திக்! திக்!

என்று அவன் இதயம் அபாயகரமாய் துடிக்க ஆரம்பித்தது. கண்கள் இருட்டிக்கொண்டு வந்தது. அவனது அறை முழுவதும் இருள் சூழ்ந்திருந்தது அவன் மனதைப்போல்.

சுற்றுவட்டாரமெங்கும் அவனைப் பார்த்தால் பயப்படுபவர் தான் அதிகம். இப்போதய நிலையைக் கண்டு அவனுக்கே பரிதாபமாக இருந்தது.

தூங்குவதற்காக எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தான். முடியவே இல்லை.

லேசாக கண்ணை மூடினாலும் சின்ன காற்றின் ஒலிக்கே திடுக்கென்று விழித்துக்கொண்டான்.

கொஞ்சம் கண்ணயர்ந்தாலும் கருப்பு வெள்ளை தேவதைகளாக வெட்டருவாளுடன் வந்து அவனைப் பார்த்து கேலியாக சிரித்தவாறே குத்தாட்டம் போட்டனர்.

அந்த சிரிப்போலியின் எதிரொலி அவன் அறை எங்கும் நான்கு மூலைகளிலும் பட்டு பட்டு அவன் காதுக்குள் எக்களித்தன!

பாவம் என்ன தான் செய்வான் அவன். பரிதாபமாய் படுத்திருந்தான்.

திடீரென்று அவனது வீட்டு கடிகாரம் "டிங் டாங்" என் அடிக்க ஆரம்பித்தது.

ஒவ்வொரு மணியாக அடிக்க அடிக்க 'ஒன்று' 'இரண்டு' என எண்ண ஆரம்பித்தான். சரியாக "இருபத்து நான்கு" அடித்து அடங்கியது.

அதாவது அவன் அறையில் பனிரெண்டு அதன் பின் அவனது பக்கத்து அறையில் பனிரெண்டு.

அய்யய்யோ அடுத்த நாள் பிறந்துவிட்டதே என்று எண்ணியவுடனே அவன் இதயம் இருமடங்கு வேகத்தில் துடிக்க ஆரம்பித்தது.

இன்னும் எத்தனை மணி நேரம் என எண்ண ஆரம்பித்தான். இன்னும் ஆறு மணி நேரம் தான் இருந்தது. அதுவரை தான் அவனது இந்த வாழ்வு அவன் கையில். அதன் பின்..

அதன் பின்..

அதன் பின்..

என நெனைத்தவாறே உறங்க ஆரம்பித்தான் அவன்.

அவன் வாய் ஏதோ ஒன்றை உலர ஆரம்பித்தது.

அது என்னவென்றால்..

அது

அது

அது

நாளைக்கு

கல்யாணம் கல்யாணம் கல்யாணம்.....................

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (21-Oct-15, 11:25 pm)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 256

மேலே