இப்படி நீ எழுத்துக்கூட்டி படித்தால்

தயவுசெய்து நீ
இதற்குமேல் புன்னகைக்காதே
இன்று மட்டும்
எத்தனை கிரகனங்களை
இவ்வுலகம் தாங்கிக்கொள்ளும்
********************************************************
தேவதைகளுக்கு
சிறகுகள் இருக்குமா?
என்ற சந்தேகம்
உன்னை பார்த்த பிறகு தான்
எனக்கு வந்தது
********************************************************
பொறாமை பொங்கி வழிகிறது
உன் அடையாள அட்டையை பார்க்கையில்
தினமும் எட்டு மணி நேரம்
உன் கழுத்தில் ஊஞ்சலாடினால்
பொறாமை வராதா என்ன?
********************************************************
உன்னை கடித்த கொசுவிற்கு
பாராட்டு விழா நடந்ததாம்
தேவதையை கடித்த கொசுவென்று
********************************************************
தங்கத்திலிருந்து
வெள்ளி வரும் அதிசியம்
நீ
வெயிலில் நடக்கும்போது
மட்டும் காணமுடிகிறது
********************************************************
முன்னிரவு நிலவு
உன்னை கைக்காட்டி
என்னிடம் கேட்டது
'யாரிவள், என்னுருவம் கொண்டு
பூமியில் திரிகிறாள்' என்று
********************************************************
எதற்காக கஷ்டப்பட்டு
கவிதை எழுதுகிறாய்?
பேசாமல்
ஒரு பிள்ளையார் சுழி
போடு போதும்
********************************************************
மண் வாசம்
வீசும் போதெல்லாம்
நீ எங்கேயோ
வியர்த்து நிற்கிறாய்
என்று நினைத்துக்கொள்கிறேன்
********************************************************
பனித்துளியை விட
நீ மட்டும் ஏன்
எடை அதிகமென
யோசித்து பார்த்தேன்,
பிறகு தான் புரிந்தது
என் மரமண்டைக்கு
அது உன் அழகின்
மொத்த எடையென்று
********************************************************
இந்த கவிதை மிகவும்
அழகாக இருக்கிறதே
என்றாய்
இருக்காதா பின்னே
இப்படி நீ எழுத்துக்கூட்டி
படித்தால்
********************************************************