நீ

மனம் தேடும் நிம்மதி நீ ..!

குணம் திணறும் போதை நீ ..!

காலம் கடத்தும் கடிகாரம் நீ ..!

கவிஞ்சனுக்கு கிடைக்காத வார்த்தை நீ ..!

கைக்கு எட்டாத நிலவு நீ ..!

நெஞ்சை கொத்தும் பறவை நீ ..!

சிரிப்பில் கொள்ளும் என் தேவதை நீ ..!

காதல் தந்து வாழ்வு கொடுக்கும் கடவுளும் நீ ..!

சொல் .......,,,

தற்போது என் மனசில் ஒரு உறுத்தல்

கடைசியாய்

சந்திக்கையில் ஒரு முத்தம் தந்தேனே

அதன் ஈரம்

அப்படியே இருக்குமா

இன்னும் உன்னுள் .....!!!!

இவன்

ரோஜாவின் ராஜா

பவுல்.S

எழுதியவர் : பவுல் (26-Oct-15, 8:50 pm)
சேர்த்தது : பவுல் ராஜ்
Tanglish : nee
பார்வை : 103

மேலே