உங்களுக்கு நீங்களே சிற்பி
மனக்கண்ணாடிக்கு
தேவையான பாதரசம் ஊட்டுங்கள்,
அப்போது தான்
எண்ணம் வெளிப்படும்
மேன்மையாக;
அதன் பளபளப்பைக்கூட்டுங்கள் ,
பார்வைகள் தெளிவாகும்..
அதுமட்டும் போதாது,
பார்வையை செலுத்தும் விதமும்
ஆரோக்கியமானதாக இருக்கட்டும்...
அண்ணாந்து இருக்கையில்
பள்ளங்கள் தெரியாது,
வாழ்ந்தவர்கள் இங்கே
வாழ்ந்து காட்டியதெல்லாம்
பாடமாக, நமக்கு
பாலமாக..
இடரும் நேரம்
எழுந்து நில்லுங்கள்
தூசு தட்டிசென்றாலே
போதும், தொடரும் பயணம், கவலையில்லை.
அது தான் சாமர்த்தியம்..
இன்னும் ஒன்று:
மனதை
பூந்தோட்டமாக வைத்திருப்பவர்கள்....
அதில் குப்பையே விழுந்தாலும்
உரமாக்கிக்கொள்வார்கள்....!
அப்படித்தான்
களைகளை உதிர்த்து
விளைநிலங்களாகுங்கள்
வெற்றியை தேடுங்கள்..