தனிமை வேளைகளிள் மனதுக்கு இனிமை தரும் பாடல்

சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை
அது தேடுது தன் உறவை
அன்பு கொள்ள ஆதரவாய் யாரும் இல்லை உலகில்
அது வாழுது தன் நிழலை
அக்கக்கோ எனும் கீதம்
அதுதானே அதன் வேதம்
சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை
அது தேடுது தன் உறவை
அன்பு கொள்ள ஆதரவாய் யாரும் இல்லை உலகில்
அது வாழுது தன் நிழலை
அக்கக்கோ எனும் கீதம்
அதுதானே அதன் வேதம்
கோவில் உண்டு தீபம் உண்டு
தெய்வம் உண்டு மலர்கள் உண்டு
பூஜை மட்டும் காண வரம் இல்லையே
கோவில் உண்டு தீபம் உண்டு
தெய்வம் உண்டு மலர்கள் உண்டு
பூஜை மட்டும் காண வரம் இல்லையே
ஓடம் உண்டு நதியும் உண்டு
நதியினிலே வெள்ளம் உண்டு
அக்கரைதான் அருகில் வரவில்லையே
இக்கரையில் குருவிக்கென்ன வேலையே
அக்கக்கோ எனும் கீதம்
அதுதானே அதன் வேதம்
சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை
அது தேடுது தன் உறவை
அன்பு கொள்ள ஆதரவாய் யாரும் இல்லை உலகில்
அது வாழுது தன் நிழலை
பூவென்றால் தேனை வைத்து
பழத்துக்குள்ளே சாறை வைத்து
பிறவிக்கெல்லாம் பெரும் பயனை வைத்தானே
பூவென்றால் தேனை வைத்து
பழத்துக்குள்ளே சாறை வைத்து
பிறவிக்கெல்லாம் பெரும் பயனை வைத்தானே
பாழும் அந்த குருவி என்ன
பாவங்களை செய்ததென்று
பரிசாக கண்ணீரை தந்தானே
நாள் முழுதும் கண்ணீரை தந்தானே
அக்கக்கோ எனும் கீதம்
அதுதானே அதன் வேதம்
சொந்தம் இல்லை பந்தம் இல்லை வாடுது ஒரு பறவை
அது தேடுது தன் உறவை
அன்பு கொள்ள ஆதரவாய் யாரும் இல்லை உலகில்
அது வாழுது தன் நிழலை

எழுதியவர் : (29-Oct-15, 12:31 am)
சேர்த்தது : செல்வமணி
பார்வை : 148

மேலே